11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நேற்று, தஙளுடைய 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். அவர்கள் அடுத்து இந்தியாவுடன் விளையாட உள்ள நிலையில், இப்படிப் போராட்டத்தில் ஈடுபட்டதால், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரிய அளவில் நஷ்டம் உண்டாகும். மேலும், தொடர்ந்து போராட்டம் நடந்தால், கண்டிப்பாக பிரச்சனை உண்டாகும் என யூகிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் கூடுதலாக மேலும் இரண்டு கோரிக்களை வைத்தனர். இதனால், கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும், வங்க தேச கிரிக்கெட் வீரர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும், விரைவில் அவையனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுத்தது.
இதனையடுத்து, தங்களுடையப் போராட்டத்தினைக் கைவிடுவதாக, வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அறிவித்தனர். மேலும், அக்டோபர் 25 முதல் இந்தியாவிற்கு எதிராக விளையாட உள்ள வீரர்கள், வலை பயிற்சியிலும் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.