இத்தாலியிலும் ரொனால்டோ தடம் பதித்தார்! இந்த வருடத்தின் சிறந்த வீரர் என்ற பட்டத்தைப் பெற்றார்!

19 May 2019 விளையாட்டு
csk2.jpg

2018ம் ஆண்டு ரியல் மேட்ரிட் அணியின் நாயகன் கிரிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியில் உள்ள யுவென்சட்ஸ் அணிக்கு, பெரும் தொகைக்கு மாறினார். சீரி ஏ அணியில் விளையாட ஆரம்பித்த ரொனால்டோவுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

முதல் மூன்றுப் போட்டிகளில் சொதப்பிய ரொனால்டோ, பின்னர் சுதாரித்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். எப்பொழுதுமே, ஒரு நாடு விட்டு ஒரு நாடு சென்று விளையாடும் பொழுது, உடல்நலம், மற்றும் மனநலம் ஆகியவை மிகவும் முக்கியம். இவ்வாறு மாறும் பொழுது, பார்ம் அவுட் ஆவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன.

இத்தகையப் பிரச்சனைகளை சமாளித்த ரொனால்டோ, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தான் யார் என்பதை, காட்ட ஆரம்பித்தார். இந்த 2018-2019ம் ஆண்டுக்கான சீரி ஏ விளையாட்டின் சிறந்த வீரருக்கான விருதை கிரிஸ்டியானோ ரொனால்டோ பெற்றார். 21 கோல்களை அடித்து அசத்திய ரொனால்டோ, யுவென்சட்ஸ் அணியின், மிக முக்கிய வீரராக தற்பொழுது மாறியுள்ளார்.

HOT NEWS