காஷ்மீரில் இராணுவ வீரர்களுடன் தோனி! சுதந்திர தினம் வரையில் இராணுவம் தான்!

25 July 2019 விளையாட்டு
msdinkashmir.jpg

தல தோனி தற்பொழுது மேற்கு இந்தியத் தொடரில் பங்கேற்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர் இந்திய பாராமிலிட்டரியில் சேவை செய்து கொண்டு இருக்கிறார்.

வரும் ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை, மகேந்திர சிங் தோனி, இந்திய பாரா மிலிட்டரியில், லியூட்டினன்ட் கொலோனல் ஆக, பணியாற்றுவார் என பாரா மிலிட்டரி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை, தோனி காஷ்மீர் பகுதியில் உள்ள, ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், கௌரவ லியூட்டினன்ட் கோலோனல் பதவி தோனிக்கு வழங்கப்பட்டது. அன்று முதல், தல தோனி, அவர் பயன்படுத்தும் செல்போன் கவர், விக்கெட் கீப்பிங் கிளவுஸ் உள்ளிட்டப் பலப் பொருட்களில், அதன் முத்திரையைப் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், தற்பொழுது பாரா மிலிட்டரியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS