கோச்சாக பதவியேற்றார் ஓலே! ரசிகர்கள் கொண்டாட்டம்!

28 March 2019 விளையாட்டு
ole.jpg

கடந்த டிசம்பர் மாதம், ஜோஸே மௌரினோ நீக்கப்பட்ட பிறகு, பகுதி நேர மேனேஜராக செயல்பட்டு வந்த ஓலே, தற்பொழுது நிரந்தர மேனேஜராக, பதவி உயர்வு பெற்றார்.

ஜோஸே மௌரினோவின் கீழ் விளையாடி வந்த மேன்செஸ்டர் யுனைடெட், மிகவும் மோசமான நிலையை அடைந்தது. இதனால், ரசிகர்கள் மட்டுமின்றி, பங்குதாரர்களும் உடனடியாக கோச்சை மாற்றச் சொல்லி, அணியின் நிர்வாக இயக்குநருக்கு, அழுத்தம் கொடுத்தனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம், மேன்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய கோச்சாக, அந்த அணியின் முன்னாள் வீரரான ஓலே குன்னார் சோல்கர் நியமிக்கப்பட்டார். இவருடைய, நியமனத்திற்குப் பின், மேன்செஸ்டர் அணி தொடர்ந்து வெற்றி மீது வெற்றிகளை பெற்றது. அது மட்டுமின்றி, பலம் வாய்ந்த பிரான்ஸின் பேரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் வென்றது.

இதனால், மேன்செஸ்டர் அணியின், பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தன. மேலும், ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இவரையே அணியின் கோச்சாகவும், மேனேஜராகவும் நியமிக்க வேண்டும் என, குரல் எழுப்ப ஆரம்பித்தனர்.

மேன்செஸ்டர் அணியின் நிர்வாக இயக்குநர், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்று ஓலே குன்னார் சோல்கர் தலைமைப் பயிற்சியாளராகவும், மேனேஜராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளக்கு இவர் மேனேஜராக இருப்பதற்கான, ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டார். இவருக்கு 8 மில்லியன் பவுண்டுகள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மேன்செஸ்டர் யுனைடெட் அணியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

HOT NEWS