சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் சிவாவிற்கு, கொலை மிரட்டல் மற்றும் கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தால், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, தொடர்ந்து மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது. ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும், சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.
இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி தோல்வியினைத் தழுவியது. வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்து வந்த சென்னை அணி, கடைசிக் கட்டத்தில் சொதப்பலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதால் கேவலமாகத் தோல்வியினைத் தழுவியது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை உருவாக்கி உள்ளது. இதனிடையே, தோனியின் மனைவி சாக்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோனியின் ரசிகர்கள் ஒரு புதிய பதிவினை பதிவிட்டு உள்ளனர்.
அதில், ஒழுங்காக விளையாடா விட்டால், உங்கள் மகள் சிவாவினை கற்பழிப்போம் அல்லது கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது போன்று பல முறை விளையாட்டு வீரர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தாலும், ஒரு குழந்தைக்கு இவ்வாறு மிரட்டல் விடுக்கப்படுவது இதுவே முதல் முறை. இதற்குப் பலரும் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
Just saw that Dhoni's 6-year-old daughter Ziva is getting rape and death threats because he didn't play well in #IPL2020
— Aryan Srivastava (@aryansrivastav_) October 8, 2020
Do people realize what shithole we have become? Can you even imagine where we are heading as a country?
Morally dead and decayed nation! pic.twitter.com/tYF9CsMleY