தமிழகத்தில் 10 மருத்துவர்கள், 5 நர்ஸ்களுக்கு கொரோனா வைரஸ்!

13 April 2020 அரசியல்
beelarajesh.jpg

தமிழகத்தில் உள்ள 10 மருத்துவர்கள் மற்றும் 5 நர்ஸ்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, தமிழகத்தில் கொரோனா வைரஸானது இரண்டாம் கட்ட நிலையிலேயே உள்ளது. தொடர்ந்து, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு, நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றது தமிழக அரசு. அதற்காக, பிரத்யேக வார்டுகளும் உருவாக்கப்பட்டு உள்ளன. அவர்களைக் கண்காணிக்க கூடுதல் மருத்துவர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், தற்பொழுது 10 மருத்துவர்களுக்கும், ஐந்து நர்ஸ்களுக்கும் இந்த நோய் தொற்றுப் பரவி உள்ளது.

இவர்களில் இரண்டு பேர், இன்று(13-04-2020) மதியம் கண்டறியப்பட்டனர். இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி, அவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HOT NEWS