வரும் பொங்கலுக்கு ரேஷன் பொருட்களுடன் 1000 ரூபாய் பணமானது, பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பொங்கலுக்கும், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தமிழக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முறையும், பொங்கலுக்கு பரிசுப் பொருட்களை அறிவித்துள்ளது அரசு. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி மற்றும் திராட்சை ஆகியவற்றுடன் ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது.
இதனை அதிகாரப்பூர்வமாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.