பனாமா தீவில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில், 12 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பனாமா தீவானது உலகப் பிரசித்திப் பெற்றது. அங்கு ஜோயிட்டா என்ற சிறை உள்ளது. அந்த சிறையில், பல்வேறுக் குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குள் நேற்று கலவரம் வெடித்தது. சிறைச் சாலைக்குள் இருந்த இரண்டு ரவுடு குழுக்களுக்கு இடையில் நடந்த சண்டையானது, துப்பாக்கிச் சூடு வரை சென்றுள்ளது. இரண்டு குழுவினரும் ஒருவரை ஒருவர் பார்த்து, சராமாரியாகச் சுட்டுக் கொண்டுள்ளனர். அப்பொழுது, 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். 12 பேர் அந்த கலவரத்தில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தினை அடுத்து, சிறைத்துறை அதிகாரிகள், சிறை முழுவதும் சோதனை நடத்தினர். அதில், பல ஆயுதங்கள், ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடி பொருட்கள் எனப் பல இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவைகளப் பறிமுதல் செய்த போலீசார், அடுத்த கட்ட விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு தன்னுடைய கடும் கண்டனத்தினை தெரிவித்துள்ள பானமா அதிபர் லாரன்டினோ கார்டிசோ சிறைத் துறை அதிகாரிகள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.