நைஜீரியக் கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் இருந்த, 18 இந்தியர்களை அந்நாட்டுக் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த, எம்.டி நேவ் கன்ஷ்டெலேசன் என்ற எண்ணெய் கப்பலானது, நைஜீரியக் கடற்படையில் பயணித்துக் கொண்டு இருந்தது. அந்தக் கப்பலில் 18 இந்தியர்கள் உட்பட, 26 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். இந்த கப்பலானது நைஜீரியாவின் போனி கடலில் சென்ற பொழுது, அந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அங்கிருந்து அந்தக் கப்பல் தப்பிப்பதற்குள், கப்பலுக்குள் குதித்த கொள்ளையர்கள் 18 இந்தியர்கள் உட்பட மொத்தம் 19 பேரை கடத்திச் சென்றனர். இந்த தகவலானது, நைஜீரியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து, அவர்களை மீட்கும் பணியானது தற்பொழுது நடைபெற்று வருகின்றது.