ஜம்மூ-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், இரண்டு இராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஜம்மூ-காஷ்மீர் பகுதியின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் இருந்து, தற்பொழுது வரை தீவிரவாதிகளின் ஊடுறுவல் அதிகரித்து உள்ளது. இதனால், அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் இந்திய இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஸ்ரீநகர் பகுதியில் உள்ள ஷல்டெங் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு சிஆர்பிஎப் வீரர்கள் விரைந்தனர். அவர்கள் வருவதை அறிந்த, தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், இந்திய வீரர்களும் தாக்குதல் நடத்தினர்.
இதில் துரதிர்ஷ்டவசமாக, இந்திய சிஆர்பிஎப் வீரர் அகால மரணமடைந்தார். இதனால், இந்திய வீரர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்தினர். அதில், இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.