ஒரே செய்திச் சேனலைச் சேர்ந்த 27 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் அதிர்ச்சி!

23 April 2020 அரசியல்
magazines.jpg

தமிழகத்தின் சென்னைப் பகுதியில் இயங்கி வருகின்ற செய்தி நிறுவனத்தில் வேலை செய்த, ஒருவரால் 27 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடக் கூடாது என, வருகின்ற மே-3ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பத்திரிக்கையார்கள், செய்தியாளர்கள் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே வெளியில் வேலை செய்கின்றனர்.

இதில், சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வருகின்ற, தனியார் டிவி சேனலைச் சேர்ந்த ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, அவருடன் பணியாற்றிய 27 பேருக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களையும், அவர்களுடையக் குடும்பத்தினரையும் தற்பொழுது தனிமைப்படுத்தியுள்ள சுகாதாரத்துறை, அவர்களை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என, தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

HOT NEWS