3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!

29 October 2019 அரசியல்
indiansoldiers.jpg

கேரளாவில் தண்டர்போல்ட் எனப்படும் போலீசாரால், மூன்று மாவோயீஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கேரளாவின் மலைப் பகுதிகளில் தொடர்ந்து, மவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இவர்களை அடக்குவதற்காக, தண்டர்போல்ட் என்ற சிறப்புக் காவல் பிரிவினை ஆரம்பித்தது கேரள அரசு. இதனையடுத்து, தொடர்ந்து, மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் தண்டர்போல்ட் குழுவினர் ஈடுபட்டு இருந்தனர்.

இதனிடையே, பாலக்காடு அருகே உள்ள மஞ்சகண்டி என்ற பகுதியில், மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் காணப்பட்டதாக, போலீசாருக்குத் தகவல் பரவியது. இதனையடுத்து, தண்டர்போல்ட் பிரிவினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் மாவோயிஸ்டுகளை அடையாளம் கண்டு கொண்டு தாக்கியதில், மூன்று மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் தப்பிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தப்பியவர்கள், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் உட்பட பல பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

HOT NEWS