வார்னீசில் எலுமிச்சை ஜூஸ்! மாற்றுப் போதைக்கு முயற்சி! 3 பேர் பலி!

06 April 2020 அரசியல்
varnish.jpg

இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது அமலில் இருக்க உள்ளது.

இதனால், அனைத்து ஒயின்சாப்புகளும் மூடப்பட்டு உள்ளன. மதுபாட்டில் கிடைக்காமல், அனைத்து குடிமகன்களுக்கும், உடலே நடுங்குகின்றது எனலாம். அந்த அளவிற்கு, மதுவானது அவர்களை ஆட்கொண்டுள்ளது. இதில், சென்ற வாரம் சேவிங் லோசனை குளிர் பானத்தில் கலந்து குடித்த மூன்று பேர் மரணமடைந்தனர்.

இதே போன்ற சம்பவம், தற்பொழுது மீண்டும் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் படாளம் பகுதியினைச் சேர்ந்த மூன்று பேர் தற்பொழுது போதையால் மரணமடைந்துள்ளனர். சிவசங்கரன், பிரதீப் என்ற இருவர் இரயில்வேயில் கேட்கீப்பர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நேற்று மர்மான முறையில் உயிரிழந்தனர்.

அவர்கள் தீராத வயிற்று வலியுடன் இறந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இவர்களின் நண்பரான கால்டாக்சி டிரைவர் சிவராமன் என்பவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவர்களிடம் பேசும் பொழுது, வார்னிசில் எலுமிச்சையைக் கலந்து போதை ஏற்றிக் கொண்டதாகவும், தற்பொழுது தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதே போன்று தான் அவருடைய நண்பர்களும் செய்தனர் எனவும், அவர்களும் தீராத வயிற்று வலியால் மரணமடைந்தனர் எனவும் கூறியிருக்கின்றார். அதனால், போலீசில் புகார் அளித்துள்ள மருத்துவர்கள், அவருக்கு அவசர சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், அவரும் தீராத வயிற்று வலியால் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துள்ளார்.

HOT NEWS