ஜம்மூவில் அட்டூழியம் செய்யும் தீவிரவாதிகள்! 3 பேர் சுட்டுக் கொலை!

10 June 2020 அரசியல்
indianarmy1.jpg

ஜம்மூ காஷ்மீர் பகுதியில், மூன்று தீவிரவாதிகளை இந்திய இராணுவத்தினர் சுட்டுத் தள்ளினர்.

தொடர்ந்து கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள், ஜம்மூ காஷ்மீர் வழியாக ஊடுருவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, கைது செய்தல் மற்றும் சுட்டுத் தள்ளுதல் ஆகிய முயற்சியில் இந்திய இராணுவம் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த வாரம் 10க்கும் மேற்பட்டத் தீவிரவாதிகள் சுட்டுத்தள்ளப்பட்டனர். இந்த சூழ்நிலையில், சுகோ என்றப் பகுதியில் இராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால், அங்குப் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட இந்திய இராணுவத்தினர், எதிர்தாக்குதலை நடத்தினர்.

இதில், அங்குப் பதுங்கியிருந்த மூன்று தீவிரவாதிகளும் சுட்டுத் தள்ளப்பட்டனர். தொடர்ந்து ஜம்மூ காஷ்மீர் பகுதியில், இந்திய இராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

HOT NEWS