சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதில், மூன்று வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சென்னையில் உள்ள மீனாம்பாள் நகரின் மேம்பாலத்தில், தன்னுடைய மூன்று வயது மகன் அபினேஷ்வருடன், கோபல் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது, திடீரென்று காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூலானது, குழந்தை அபினேஷ்வரின் கழுத்தில் சிக்கிக் கொண்டு அறுத்தது. இதனால், சம்பவ இடத்திலேயே அதிக இரத்தம் வெளியேற ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து அந்தக் குழந்தை, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், மருத்துவ மனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தையின் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாஞ்சா நூல் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என, ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், இந்தப் பிரச்சனையில் எங்கிருந்து வந்தது எனத் தெரியாது. இருப்பினும், பட்டம் விடப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இப்பகுதியில் மாஞ்சா நூலினைப் பயன்படுத்தியவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். மேலும், சென்னையில் உள்ள கடைகளில், மாஞ்சா நூல் விற்கப்படுகின்றதா எனவும் சோதனை நடத்தியும் வருகின்றனர்.