மஹாராஷ்டிராவில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு, 350 அடியில் பிரம்மாண்ட சிலை வைக்கப்படும் என, அம்மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான அஜித்பவார் தெரிவித்துள்ளார்.
சிவசேனா, தேசியவாதக் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில், மஹாராஷ்டிராவில் தற்பொழுது சிவசேனா ஆட்சி செய்து வருகின்றது. இதனிடையே, சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு நினைவகம் அமைக்கும் பணிகள், மிக மெதுவாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கடந்த பாஜக அரசால் இந்த திட்டம் உருவாகப்பட்டு இருந்தாலும், பெரிய அளவில் முன்னேற்றம் இல்லததால், இந்தத் திட்டத்தினை மறுபடியும் சிவசேனா கையில் எடுத்துள்ளது. அதுபற்றிப் பேசியுள்ள அஜித் பவார், நூறு அடி உயரத்திற்கு அம்பேத்கருக்கு நினைவிடமும், 350 அடி உயரத்திற்கு அம்பேத்கருக்கு சிலையும் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டமானது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்தார்.