தமிழகத்தில் வேலைவாய்ப்பினை அதிகரித்து வருவதைப் போல, மாவட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. நேற்று திருப்பத்தூர் மாவட்டம் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் பழனிசாமி நிர்வாகப் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிலையில், இன்று காலையில் தமிழகத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு இன்று உருவாக உள்ளது. இதற்கான, பணிகள் முடிந்துள்ள நிலையில், அம்மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைக்கின்றார். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பிற அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பல நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் துவங்கி வைக்கும் முதல்வர், 5,000 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளை சுமார் 80 கோடி மதிப்பில் செய்து தர உள்ளார்.