கபூலில் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் உட்பட, 16 பேர் பலியான சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் உள்ள பிரசவ மருத்துவமனையில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில், பிறந்த குழந்தைகள் என மொத்தம் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காவலர்கள் உடையணிந்த மூன்று தீவிரவாதிகள், வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் உள்ளனர். இதனால், 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பெண்கள், குழந்தைகள், செவிலியர்கள் எனப் பலரும் இந்தத் தாக்குதலில் பலியாகி உள்ளனர். இதனால், தீவிரவாதிகளை தடுக்கு போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்து, உள்ளே இருந்தவர்களை மீட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீட்டவுடன், அங்கிருந்து மூன்று தீவிரவாதிகளையும் சுட்டுத் தள்ளினர்.
அதே போல், வடக்கு ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற மற்றொருத் தீவிரவாத தாக்குதலில் 24 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். போலீஸ் அதிகாரியின் இறுதி ஊர்வலத்தில் புகுந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி, தான் கொண்டு வந்திருந்த வெடிகுண்டினை வெடிக்கச் செய்தான். இதனால், அங்கு திரண்டிருந்த 24 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும், 65க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.