மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை, கொரோனாவால் இறந்தவர்களில் 444 பேர் விடுபட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் பேசுகையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரை, கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களில் 444 மரணங்கள் விடுபட்டு உள்ளனர்.
அவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், இன்று வரை (23-07-2020) சுமார் 3144 பேர் பலியாகி உள்ளனர் என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது புதிய சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது. இவ்வளவு நபர்களின் மரணம் எவ்வாறு விடுபட்டது எனப் பலரும் கேள்விக் கேட்டு வருகின்றனர். மருத்துவர் வடிவேல் அவர்களின் தலைமையில் ஆனக் குழுவினர், தமிழக அரசிடம் இது குறித்த அறிக்கையினைத் தாக்கல் செய்தனர்.
அதனை வைத்துத் தற்பொழுது, கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையானது மாற்றப்பட்டு உள்ளது.