யூடியூப்பில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோக்களை வெளியிட்டு வந்த மாரிதாஸ் மீது, புதிதாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
யூடியூப்பில் மாரிதாஸ் ஆன்சர்ஸ் என்றப் பெயரில் சேனல் ஒன்றினை, மாரிதாஸ் வைத்து நடத்தி வந்தார். அதில், திராவிட அரசியல் குறித்தும், இந்து மதம் பற்றியும், பாஜகவின் அரசியல் பற்றியும் வீடியோக்களைப் பகிர்ந்து வந்தார். அவருடையப் பேச்சினைக் கேட்க, பல லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், அவர் மீது தனியார் தொலைக்காட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அவருடையப் பெயரில், போலி இமெய்ல் முகவரியினைப் பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டு உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, போலியாக ஆவணம் புணைதல், பொய்யான டிஜிட்டல் ஆதாரம், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ், மொத்தம் ஐந்து வழக்குகளைப் போலீசார் பதிவு செய்துள்ளனர்.