புதுச்சேரியில் பயங்கரம்! 5 சிறுமிகள் கூட்டு பலத்காரம்! அடிமையாக பயன்படுத்தப்பட்டது அம்பலம்!

13 November 2020 அரசியல்
rape.jpg

புதுச்சேரியில், 5 சிறுமிகளை அடிமைகளாக வேலைக்கு வைத்து, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள அதிர்ச்சி தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்திய அளவில் பதற்றத்தினை உருவாக்கி உள்ள விஷயமாக, புதுச்சேரி பலத்காராம் இருக்கின்றது. புதுச்சேரியில் வாத்துப் பண்ணை வைத்திருப்பவர் கன்னியப்பன். வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தினைச் சேர்ந்த இவர், சொந்தமாக கோர்காடு ஏரிக்கரையில் வாத்து பண்ணை வைத்து நடத்தி வருகின்றார். இந்த வாத்துப் பண்ணையில், 5 சிறுமிகள் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு போதைப் பொருட்களைக் கொடுத்து, 53 வயதான கன்னியப்பன், தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

அவருடன் சேர்த்து, அவருடைய 27 வயதுடைய மகன் ராஜ்குமார் மற்றும் அவருடைய உறவினர்கள் பசுபதி, அய்யனார், அப்பகுதியில் வசித்து வந்த வேட்டைக்காரர்கள் சிவா, மூர்த்தி, 15 வயது மகன் மற்றும் 22 வயதுடைய கன்னியப்பனின் இளைய மகன் உள்ளிட்டோர் இதனைச் செய்துள்ளனர். இந்த விஷயம் அறிந்த போலீசார், அந்தப் பெண்களை பத்திரமாக மீட்டு உள்ளனர்.

இது குறித்து, தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் தற்பொழுது விசாரிக்க ஆரம்பித்து உள்ளது. அதன் சார்பில், மருத்துவர் ஒருவர் வந்து, அந்த பெண்களை சோதனை செய்து உள்ளார். மேலும், அவர்கள் தங்கியிருந்த இடம் உள்ளிட்டவைகளையும் பார்வை செய்துள்ளார். இந்தப் பெண்களை, வந்தவாசியில் இருந்து 3,000 ரூபாய்க்கு கன்னியப்பன் வாங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS