தற்பொழுது வரை, இந்த கொரோனா வைரஸ் காரணமாக, 722 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 32,000 பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ் தோன்றியதாக கருதப்படும், ஊஹான் பகுதியில் இருக்கும் அனைத்து மருத்துவ மனைகளிலும், நோயாளிகளினால் நிரம்பியுள்ளது. மேலும், இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட 2050 பேர், தற்பொழுது வரை நோய் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எப்படியாவது, மருந்து கண்டுபிடித்து விட வேண்டும் என, சீனாவின் விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், இந்த கொரோனா வைரஸ் மூலக் காரணம் தெரியாததாலும், இதன் செயல்திறன் பற்றி குறிப்பிட முடியாததாலும் மருந்து கண்டுபிடிக்க கஷ்டமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்த வண்ணம் இருப்பதால், மேலும் சில மருத்துவமனைகளை சீன அரசாங்கம் உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளுக்கு நாள், இந்த நோயால் பாதிப்பவர்களையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வருத்தமளிக்கும் விஷயமாகவே உள்ளது.