அசாம் வெள்ளத்திற்கு 76 பேர் பலி! 25 லட்சம் பேர் பாதிப்பு!

14 July 2020 அரசியல்
assamflood.jpg

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், தற்பொழுது வரை ஆறு பேர் பலியாகி உள்ளனர்.

அசாம் மாநிலத்தில், தென்மேற்குப் பருவமழைக் காரணமாக கடுமையான மழையானதுப் பெய்து வருகின்றது. இது குறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெளியிட்டுள்ளத் தகவலின் படி, கடுமையான மழையின் காரணமாக 27 மாவட்டங்களைச் சேர்ந்த, 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் இந்த மாவட்டங்களில், குறிப்பிட்ட சிலப் பகுதிகள் கடும் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், தெரிவித்துள்ளது. இந்த மழையினால், அசாம் மாநிலத்தின் சாலைகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. தற்பொழுது வரை, இந்த வெள்ளதால், 50 பேர் பலியாகி உள்ளனர் எனவும், மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 26 பேர் பலியாகி உள்ளனர் எனவும் கூறியுள்ளது.

இந்த மழையானது தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால், இந்த பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

HOT NEWS