ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்து கொலை! திருச்சியில் சோகம்!

07 July 2020 அரசியல்
murderkiller.jpg

திருச்சி மாவட்டத்தில் 9ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவி, எரித்துக் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையம் அருகே, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி, குப்பை கொட்டுவதற்காக வீட்டில் இருந்து குப்பைதொட்டியினை நோக்கிச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும், வீட்டிற்குத் திரும்பததால் பெற்றோர் சந்தேகமடைந்து, அப்பகுதி முழுக்கத் தேடியுள்ளனர்.

இதனை அடுத்து, அருகில் உள்ளக் காட்டுப் பகுதியில் தேடிய பொழுது, அங்கு எரிந்த நிலையில், அந்த மாணவி சடலமாகக் கிடந்தார். இதனையடுத்து, போலீசாருக்குப் புகார் அளிக்கப்பட்டது. சடலத்தினைக் கைப்பற்றியப் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அந்தப் பெண்ணை வேறு இடத்தில் வைத்துக் கொலை செய்துள்ளதையும், பின்னர் எரித்து இங்கு வந்த சடலத்தினை வீசி சென்றுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தக் கொலையை செய்தவர்கள் யார்? எதற்காக செய்தனர் எனப் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் நடைபெற்றுள்ள இச்சம்பவம், பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS