ஒரே நாளுக்குள் 9 தீவிரவாதிகள் வேட்டை! இராணுவம் அதிரடி!

05 April 2020 அரசியல்
indianarmy1.jpg

கடந்த 24 மணி நேரத்திற்குள் ஒன்பது தீவிரவாதிகளை, இந்திய இராணுவம் சுட்டுத் தள்ளியது.

இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. போலீசார் முழு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மூ-காஷ்மீர் பகுதிக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியானது முழுமையான இராணுவப் பாதுகாப்பில் இருந்து வருகின்றது.

தொடர்ந்து பல தீவிரவாதிகள் இந்தப் பகுதிக்குள் நாச வேலைகளைச் செய்ய முயன்றும், பதுங்கியிருந்தும் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பத்போரா பகுதியில் பதுங்கியிருந்த நான்கு தீவிரவாதிகளை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது.

மேலும், கேரன் செக்டார் என்றப் பகுதியில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற ஐந்து தீவிரவாதிகளை இந்திய இராணுவ வீரர்கள் துணிச்சலாகப் போராடி சுட்டுக் கொன்றனர். இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற்றத் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் ஐந்து பேரும் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில், இந்திய இராணுவ வீரர் ஒருவர் தீவிரவாதிகள் சுட்டதில் மரணமடைந்தார். இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை, இராணுவத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

HOT NEWS