நரேந்திர மோடியின் புகழ் இந்தியாவில் மட்டுமல்ல, இஸ்ரேலிலும் கொடிகட்டிப் பறக்கிறது. அங்கு செப்டம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, பிரதமராக உள்ள பெஞ்சமின் நெத்தன்யகூ போட்டியிடுகிறார். இதன் காரணமாக, அவரும் அவருடையக் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்குள்ள கட்டிடத்தில், பெஞ்சமின் சந்தித்த, உலகின் பெரியத் தலைவர்களின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய, பிளக்ஸ் தொங்கவிடப்பட்டுள்ளது.
இதனை அந்நாட்டு ஊடகங்கள் தற்பொழுது வைரலாக்கி வருகின்றன. செப்டம்பர் 17ல் நடைபெற உள்ள தேர்தலில், லிகுத் கட்சியின் சார்பாக பெஞ்சமின் போட்டியிடுகிறார். அவரும், மோடியும் நண்பர்களாக இருக்கின்றனர். இதனையொட்டியே அவர்களுடையப் புகைப்படம் அங்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், பிரதமர் மோடியின் புகழ் தற்பொழுது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ, நம் இந்தியப் பிரதமரின் புகைப்படம் இஸ்ரேலில் இருப்பது நமக்குப் பெருமை தானே!