தமிழகத்தின் பால் வளத்துறையானது, புதியதாக 4 உணவுப் பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. அதனை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
இன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதல்வரை சந்தித்தார் அப்பொழுது, ஆவின் சார்பில் முக்கிய நிர்வாகிகளும் முதல்வரை சந்தித்தனர். அந்த சந்திப்பில், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மாங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால், ஆவின் டீ மேட் பால் உள்ளிட்ட 5 பொருட்களை தமிழக முதல்வருக்கு காண்பித்தனர்.
அதனைப் பார்த்த பின்னர், அவைகளை விற்பனைக்காக ஆரம்பித்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும், ஆவினிற்கு தன்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் விற்பனையில் முன்னோடியாக திகழும் ஆவின் நிறுவனம் சார்பில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால், ஆவின் டீ மேட் பால் ஆகிய 5 புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்தேன். pic.twitter.com/BaLDvLultL
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 8, 2020