ஆழ்துளைக் கிணறுகளை, மழைநீர் சேகரிக்கும் தொட்டிகளாக மாற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சியில் 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததை அடுத்து, தமிழக மக்கள் தாமாக முன்வந்து, ஆழ்துளைக் கிணறுகளை மூடி வருகின்றனர். இதனை முன்னிட்டு, தமிழ்நாடு வடிகால் வாரிய இயக்குநர் திரு. மகேஸ்வரன் அதிரடி உத்தரவினைப் பிறப்பித்து உள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும், ஆழ்துளைக் கிணறுகள், திறந்த வெளிக் கிணறுகள், நீர் உறிஞ்சும் கிணறுகள் ஆகியவற்றை உடனடியாக, அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழைநீர் சேகரிக்கும் தொட்டிகளாக மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஆழ்துளைக் கிணறுகளை மழை நீர் சேமிக்கும் தொட்டிகளாக மாற்ற, உதவி தேவைப்பட்டால் 9445802145 என்ற தொலைபேசி எண்ணினைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.