ஊதியத்துடன் ஊழியர்களுக்கு விடுமுறை! சூரியின் தாராள மனம்!

07 April 2020 சினிமா
soori.jpg

நடிகர் சூரி, தன்னுடைய ஓட்டல்களில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனைத் தடுக்கும் பொருட்டு, வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை, அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், பலரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வணி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில், தன்னுடைய அம்மன் ஓட்டலில் பணிபுரிந்த 350 ஊழியர்களுக்கும் நடிகர் சூரி விடுமுறை அளித்துள்ளர். இது தற்பொழுது வைரலாகி உள்ளது.

இது குறித்துப் பேசியுள்ள அவர், தன்னுடைய அம்மன் ஓட்டலில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும், ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், பெப்சி அமைப்பிற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், இந்த வைரஸானது, மூன்றாம் உலகப் போருக்கு நிகரான பீதியினைக் கிளப்பி உள்ளதாகவும், எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

HOT NEWS