நடிகர் விஷால் அலுவலகத்தில் 45 லட்சம் மோசடி! போலீசார் புகார்!

03 July 2020 சினிமா
actionmovie.jpg

நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலின் அலுவலகத்தில் வேலை செய்த கணக்காளர், 45 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த மாதம், நீதிமன்றத்தில் விஷால் மீதான வரி மோசடி வழக்கானது விசாரணைக்கு வர உள்ளது. ஊழியர்களின் ஊதியத்தினைப் பிடித்த டிடிஎஸ் தொகைக்கான 4 கோடி ரூபாயினை வரியாக செலுத்தாமல் இருந்தது தொடர்பாக, நடிகர் விஷால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது, தற்பொழுது மீண்டும் அடுத்த மாதம் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த சூழ்நிலையில், விஷால் பிலிம் பேக்டரியின் மேனேஜர் ஹரிகிருஷ்ணன் தற்பொழுது பரபரப்பு புகார் ஒன்றினை போலீசில் கொடுத்துள்ளார். அதில், விஷாலின் கணக்காளராகப் பணியாற்றி வந்த ரம்யா என்பவர், டிடிஎஸ் வரித் தொகையினை செலுத்தாமல், போலியாக ரசீது மற்றும் ஆவணங்களை எங்களிடம் தந்து ஏமாற்றி உள்ளார்.

அவர் சுமார் 45 லட்ச ரூபாய் அளவிற்கு ஏமாற்றி உள்ளார். இதற்கு உதவியாக இருந்தவர்களையும், போலீசார் கைது செய்ய வேண்டும் என்று அவர் புகார் அளித்துள்ளார். இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS