ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு! 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

19 August 2019 அரசியல்
comalireview.jpg

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பின் காரணமாக, 50க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு திருமண நிகழ்ச்சியில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

180க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இன்று நூறாவது சுதந்திர நாளன்று, காலை ஜலாலா நகரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி, 66 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக, அந்நாட்டு செய்தி நிறுவனமான, பஜ்வாக் ஆப்கான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

தொடர்ந்து, ஒரே வாரத்தில் நடைபெறும் இரண்டாவது வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்குப் பிறகே, வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்தத் தீவிரவாத தாக்குதல்களுக்கு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது.

HOT NEWS