அதிமுக முன்னாள் எம்எல்ஏ வளர்மதிக்கு கொரோனா தொற்று இருப்பது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கி, தற்பொழுது வரை ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தினைப் பொறுத்தமட்டில், சென்னை, உட்படப் பல மாவட்டங்களில் கொரோனா வைரஸானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
கடந்த மாதம், திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தார். இந்த சூழ்நிலையில், பல எம்எல்ஏ, கட்சிப் பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று பரவி நிலையிலேயே இருக்கின்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே போல், தற்பொழுது அதிமுக முன்னாள் எம்எல் ஏ வளர்மதிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதுமட்டுமின்றி, அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தற்பொழுது கொரோனா தொற்று இருக்கின்றதா என சோதனைகள் நடைபெற்று வருகின்றன.