48 ஆண்டுகளை கடந்த அதிமுக! எம்ஜிர் டூ எடப்பாடி! சோதனைகளைத் தாண்டி சாதனை!

17 October 2019 அரசியல்
aiadmk48.jpg

1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி புரட்சித் தலைவர் என, மக்களால் அழைக்கப்பட்ட எம்ஜிஆர் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி எனும் பல தமிழக முதல்வர்களை உருவாக்கிய ஒரு கட்சி.

இன்று, அதன் 48வது ஆண்டு விழாவினை எட்டியுள்ளது. இந்தியாவிலேயே மிகக் குறுகிய காலத்தில், பல சாதனைகளை படைத்தக் கட்சி. இதனை முன்னிட்டு, இன்று காலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அதிமுகவின் நிர்வாகிகளும், அதிமுக தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான திரு. ஓபன்னீர் செல்வம் மற்றும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின், ஜெயலலிதாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இருவரும் இணைந்து, தங்களுடைய கையினால், கட்சி நிர்வாகிகளுக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கி, மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

HOT NEWS