சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானை, இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி இளவரசரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோரியும் இருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் சென்ற இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் திரு. அஜித் தோவல், அங்கு, சவுதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்து, இது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
சுமார், இரண்டு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பாகிஸ்தான் பற்றியும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றியும் பேசியதாக கூறியுள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சந்திப்பில், சவுதியில் உள்ள, எண்ணெய் நிறுவனத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவாதித்ததாகவும் கூறியுள்ளனர்.