இந்தியாவிற்கு அல்கொய்தா மிரட்டல்! பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும்!

11 July 2019 அரசியல்
aymanalzawahiri.jpg

இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி, இந்திய நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர், அய்மன் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய இராணுவத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டும். அப்பொழுது தான் அங்கு மனித உயிரிழப்புகள் ஏற்படும். இதன் மூலமே, அங்குப் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். மேலும், இந்திய இராணுவத்திற்கும், காஷ்மீர் அரசுக்கும் எதிராகப் போராட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நம் சமூகத்தினர் இழந்த நிலங்களை மீட்பதற்காகவே, காஷ்மீர், பிலிப்பைன்ஸ், செசன்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்படுவதாக, அய்மன் தெரிவித்துள்ளார்.

HOT NEWS