காணும் பொங்கலான (17-01-2020) இன்று, மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இதில், அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைமாடும் கலந்து கொண்டது.
கொம்பன் என்றுப் பெயரிடப்பட்டுள்ள அந்த மாடானது, வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் பொழுது, வீரர்கள் அனைவருமே தெறித்து ஓடிவிட்டனர். அந்த மாட்டினைப் பிடிப்பவருக்கு, தங்க காசு, வெள்ளிக் காசு, அண்டா, பரிசுப் பை எனப் பல வகையான பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்பட்டன.
இருப்பினும், ஒருவராலும் அந்தக் காளையின் அருகில் கூட, செல்ல இயலவில்லை. அந்த அளவிற்கு அந்தக் காளை மாடானது, வெறித்தனமாக விளையாட்டு காட்டியது. ஒரு கட்டத்தில், விழாக் கமிட்டியினரே, அந்த மாடு வென்று விட்டதாக அறிவித்தப் பின்னரும், அந்த மாடு நகருவதாக இல்லை. கடைசியில் மாட்டினை வளர்ப்பவர்கள், அதனை சைகை செய்து அழைத்துச் சென்றனர். இதனை பெருமையுடன், அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
#அலங்காநல்லூரில் சாதித்துவிட்டீர்கள் என் #கொம்பன்களே
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) January 17, 2020
வீரக்களத்தில் வில்லில் விடுபட்ட அம்பென சீறி #ஜல்லிக்கட்டு வீரர்களை
தெறிக்கவிட்டீர்கள்!
அசுரத்தனம் காட்டிய உங்கள்
வீரத்தின் காட்சி தமிழின வீரத்தின் சாட்சி!!
கொம்பு வைத்த சிங்கமென வெற்றி வாகை சூடினீர்கள்#Jallikattu2020 #Komban pic.twitter.com/kLvVBiQnrJ