அமெரிக்காவின் வாஷிங்டன்னில் துப்பாக்கிச் சூடு! பலர் கவலைக்கிடம்!

20 September 2019 அரசியல்
washingtodcfire.jpg

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்றுள்ள துப்பாக்கிச்சூட்டின் காரணமாக, இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமான சூழ்நிலையில், மருத்துவமனையில் உள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், துப்பாக்கி ஏந்தியவர்கள் சிலர், ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த அப்பாவி மக்களைப் பார்த்து, கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். இதனை எதிர்ப்பாராத மக்கள், அங்குமிங்கும் சிதறி ஓடியுள்ளனர்.

இருப்பினும், நிலைமையை உணர்வதற்குள் அவர்கள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து விழுந்தனர். இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து, மோசமான நிலைமையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில், துப்பாக்கி சூடு நடப்பது தற்பொழுது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. அங்கு பள்ளிக்கூடங்களில் துப்பாக்கிச் சூடு, பார்களில் துப்பாக்கிச் சூடு என பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS