அடுத்த நான்கு மாதங்களுக்குள் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்படும்! அமித் ஷா!

17 December 2019 அரசியல்
amitshahoffice.jpg

அடுத்த நான்கு மாதங்களுக்குள், உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில், இராமருக்குப் பிரம்மாண்டமான கோவில் கட்டப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்கண்டில் தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள பக்கூர் மாவட்டத்தில் நடைபெற்ற, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

அப்பொழுது பேசிய அவர், நவம்பர் 9ம் தேதி அன்று, வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பினை, உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. அதன்படி, அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட உள்ளோம். அந்தக் கோவில் விண்ணை முட்டும் அளவிற்கு மிகப் பிரம்மாண்டமானதாக இருக்கும். அடுத்த நான்கு மாதங்களுக்குள் ராமரின் கோவில் கட்டி முடிக்கப்படும்.

தற்பொழுது உச்சநீதிமன்றம் கூரியபடி, இராமர் கோவில் கட்டுவதற்கான கமிட்டியினை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகின்றது எனவும் கூறியுள்ளார். ஜார்கண்டில் நான்காம் கட்டத் தேர்தலுக்கானப் பிரச்சாரத்தில், பாஜக தற்பொழுது பம்பரமாக சுழன்று செயல்பட்டு வருகின்றது.

மொத்தமுள்ள 221 தொகுதிகளுக்கானத் தேர்தலில், பாஜக மட்டுமே அதிக அளவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS