ஜோத்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பாஜகவின் முக்கியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா சிஏஏ விழிப்புணர்வு கூட்டத்தினை தொடங்கி வைத்தார்.
அதில் பேசும் பொழுது, எதிர்கட்சிகள் மக்களிடம் தவறானத் தகவல்களை பரப்பி வருகின்றன. சிஏஏ பற்றி எதிர்கட்சிகளுக்கு எதுவும் தெரியவில்லை. ராகுல்காந்திக்கு இந்த சிஏஏ பற்றி ஒன்றும் தெரியாது. சிஏஏ சட்டத்தினைப் பற்றி முதலில் அவர் படிக்கட்டும். பின்னர், அவருடன் என்னுடன் வந்து விவாதிக்க வேண்டும். அவர் விவாதிக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.
கடந்த சில வாரங்களாக, டெல்லி உட்பட நாட்டின் பல இடங்களில் வன்முறைகள், போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இது தவறான செயல். பொதுமக்கள் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவினர் சார்பில், இந்தியா முழுக்க சுமார் 500 இடங்களில், 3 கோடி மக்களை சந்தித்து, சிஏஏ சட்டம் குறித்து, விரிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது எனக் கூறினார்.