பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா வருவதை ஒட்டி, அதனைப் பிரம்மாண்டமாக கொண்டாட, பாஜகவினர் முடிவு செய்துள்ளனர். இதனை முன்னிட்டு, பல நலத்திட்ட உதவிகளையும் அக்கட்சியினர் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
இதனை முன்னிட்டு, இன்று காலையில், பாஜகவின் மூத்த தலைவர் திரு. அமித்ஷா மற்றும் பாஜகவின் அதிகாரப்பூர்வ தலைவர் ஜேபி.நட்டா ஆகியோர், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு ’சேவா சப்தா’ என்ற புதிய நிகழ்ச்சியைத் தொடங்கினர். பின், அங்குள்ள தரையினை சுத்தம் செய்தனர். பின்னர், அங்கிருந்த குழந்தைகள் மருத்துவப் பகுதிக்கு சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு, இலவசமாக பழங்கள் உள்ளிட்டப் பொருட்களை வழங்கினர்.
செப்டம்ர் 17ம் தேதி பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு பிறந்த நாள். அன்று இந்தியா முழுக்க உள்ள பாஜக தொண்டர்கள் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், பல ஆச்சர்யப்படுத்தும் பிறந்த நாள் பரிசையும் தயார் செய்து வருகின்றனர் என, அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.