pic courtesy:twitter.com/edappadipalanisami
தமிழகத்தில், இன்று அம்மா ரோந்து வாகனத்தை தொடங்கி வைத்தர், தமிழக முதல்வர் திரு பழனிசாமி. இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், அம்மா பேட்ரோல் வாகனத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் நடைபெறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானக் குற்றங்களை விசாரிக்கும், காவல் நிலையங்களுக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் புதிய ஹெல்ப்லைன் நம்பர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான அவசர உதவி மைய எண் நம்பர் 1098, பெண்களுக்கான அவசர உதவி மைய எண் 1091 என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது 40 வாகனங்களை அனுமதித்துள்ள முதல்வர், விரைவில் இதனை விரிவாக்கம் செய்வர் என, செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர் செல்வம், உட்பட பல அமைச்சர்கள் உடன் இருந்தனர்.