ஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்து ஏற்ப்பட்ட விபத்தில், இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியானது முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, விநாயகர் சிலையை கரைப்பதற்கு கோதாவரி ஆற்றிற்குப் படகில் பலரும் சென்றனர். அப்பொழுது எதிர்ப்பாராத விதமாக படகு ஆற்றில் மூழ்கியது. இதனால், 11 பேர் உடனே உயிரிழந்தனர். பலரைக் காணவில்லை. இதனைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களின் உடலைத் தேடும் பணித் தொடங்கியது. வரிசையாக, நீரில் மூழ்கியவர்களின் பிணங்கள் ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கப்பட்டதால், அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இதற்கிடையே, தேசிய பேரிடர் மீட்புப் படையும் இந்த தேடுதலில் களமிறங்கியது.
தற்பொழுது வரை 34 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால், ஆந்திர மாநிலம், கோதாரி மாவட்டமே, சோகத்தில் ஆழ்ந்துள்ளது.