பதவியேற்கின்றார் அரவிந்த் கெஜ்ரிவால்! மப்ளர்மேனுக்கு அழைப்பு!

15 February 2020 அரசியல்
aapwin.jpg

டெல்லியில் நடைபெற்ற, சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியானது, 70க்கு 62 இடங்களில் வென்று, ஆட்சியினைக் கைப்பற்றியது. இதனையடுத்து, அக்கட்சி ஆட்சியமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மீண்டும் டெல்லியின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள், தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொள்ள, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கும், அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை, டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில், ஒரு சில முக்கியப் புள்ளிகளும், அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். அந்த நிகழ்ச்சியில், மப்ளர் மேன் என அழைக்கப்பட்ட சிறுவனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியினர் வென்ற பொழுது, அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அப்பொழுது, அக்கட்சியின் தொண்டர்களில் ஒருவர், தன்னுடைய மகனுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் போல வேடமிட்டு அழைத்து வந்திருந்தார். அந்த சிறுவனின் புகைப்படமானது, வைரலானது, இதனையடுத்து, அந்த சிறுவனுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் மூன்றாவது முறையாக முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவால்.

HOT NEWS