அர்ஜூன் சம்பத் கைது! திருவள்ளுவருக்கு ருத்திராட்ச மாலை அணிவித்து வழிபாடு!

06 November 2019 அரசியல்
arjunsampath.jpg

தஞ்சாவூரில் உள்ள பிள்ளையார்பட்டியில், திருவள்ளுவருக்கு ருத்திராட்ச மாலை அணிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.

இன்று காலையில், அங்கு சென்ற அவர், திருவள்ளுவருக்கு, மாலைகள், காவித் துண்டு அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், கையில் வைத்திருந்த ருத்திராட்ச மாலையையும் அணிவித்து, கற்பூர ஆரத்தி காட்டினார். இந்து முறைப்படி பூஜைகளையும் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அர்ஜூன் சம்பத், திருவள்ளுவர் ஒரு இந்து. அவருக்கு இந்து முறைப்படி தான் பூஜைகள் செய்ய வேண்டும். அதில் என்ன தவறு இருக்கின்றது எனக் கூறினார்.

பின்னர், கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் பகுதியில் அவர் வந்து கொண்டு இருக்கும் பொழுது, தமிழக போலீசார் அவரைக் கைது செய்தனர். அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டதற்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அர்ஜூன் சம்பத் பூஜை செய்யப்பட்டது தொடர்பாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

HOT NEWS