சோனியா காந்தியின் உண்மைப் பெயரை கூறிய அர்னாப்! காங்கிரஸ் வழக்கு!

23 April 2020 அரசியல்
soniagandhi.jpg

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர், சோனியா காந்தியினை அவதூறாகப் பேசியதாக, ரிபப்ளிக் டிவியின் நிறுவனரும், செய்தி தொகுப்பாளருமான அர்னாப் கோஸ்சுவாமியின் மீது, வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.

நேற்று செய்தியாளர் உரையாடலின் பொழுது, சோனியா காந்தியினைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய அர்னாப் கோஸ்வாமி, சோனியா காந்தியின் உண்மைப் பெயர் சோனியா அன்டானியோ மைனோ என்றும், அவர் ஒரு இத்தாலியர் எனவும் குறிப்பிட்டார். அவரை மேலும், தாக்கிப் பேசினார்.

இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில், மாபெரும் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, கட்சித் தலைவர் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக, அர்னாப் கோஸ்வாமியின் மீது, இந்தியாவின் பல மாநிலங்களில், காங்கிரஸ் கட்சியினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

HOT NEWS