முன்னாள் நிதியமைச்சர் திரு. அருண் ஜெட்லி அவர்கள், உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 66 வயதான அருண் ஜெட்லி, இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின், அவர் முழு நேர ஓய்வில் இருந்தார். இதனால், இடைக்காலப் பட்ஜெட்டை பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். இந்நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அருண் ஜெட்லி போட்டியிடவில்லை.
இதனிடையே கடந்த ஒன்பதாம் தேதி, திடீரென அருண் ஜெட்லிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, மருத்துவர்களின் கண்காணிப்பில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த வாரம், கொஞ்சம் உடல்நலம் தேறிய நிலையில், மீண்டும் இந்த வாரம் அவருடைய உடல்நிலை மிக மோசமானது. தொடர்ந்து 24 மணி நேர, மருத்துவர் கண்காணிப்பில், அருண் ஜெட்லி இருந்து வந்தார்,
இந்நிலையில் இன்று 12.07 மணி அளவில், திரு. அருண் ஜெட்லி இயற்கை எய்தியதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.