ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி சுட்டுக் கொலை! டிரம்ப் அறிவிப்பு!

28 October 2019 அரசியல்
baghdadi.jpg

தேர்தல் வந்துவிட்டால் போதும், பின்லேடனை சுட்டுக் கொல்வது, தீவிரவாதத் தலைவர்களை கொன்றுவிட்டது, மார்தட்டிக் கொள்வது அமெரிக்க அரசியல்வாதிகளின் பழக்கமாக உள்ளது.

ஒபமா, கடந்த முறை ஒசமா பின்லேடணைக் கொன்றுவிட்டதாக, தேர்தலுக்கு முன் அறிவித்தார். இரண்டாவது முறையும் அதிபர் ஆனார். அவருடைய வழியைப் பின்பற்றி, தற்பொழுது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவரைக் கொன்றுவிட்டதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அபு பக்கர் அல் பாக்தாதி அமெரிக்க கூட்டுப்படைகளால், நேற்று (27-10-2019) அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடமேற்கு சிரியாவில் பதுங்கியிருந்த பாக்தாதியை, அமெரிக்கப் படைகள் நெருங்கியதும், அவர்களைப் பார்த்து கதறி அழுதுள்ளார் பாக்தாதி. அவரை சுட்டுக் கொன்ற பின்னர், சுமார் 15 நிமிடங்கள் கழித்து, அவருடைய டிஎன்ஏ அறிக்கையை அதிபர் டிரம்ப்பிற்கு அனுப்பினர்.

HOT NEWS