நாளை முதல் மூன்று நாட்கள் வங்கிகள் விடுமுறை! ஏடிஎம் சேவை?

30 January 2020 அரசியல்
atmmachine.jpg

நாளை முதல் மூன்று நாட்களுக்கு, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள், தங்களுடைய 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்த உள்ளனர். தங்களுடைய சம்பள உயர்வினையும், 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகளை கூறியும், மூன்று நாட்கள் அடைய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இதற்காக, ஏற்கனவே அவர்கள் அமைப்பானது அறிவிப்பினை வெளியிட்டது. இதனால், நாளை 31, பிப்ரவரி ஒன்று மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் வங்கிகள் செயல்படாது. இதனால், பொதுமக்கள் இன்றே வங்கிகளில் குவிந்தனர். இந்த மூன்று நாட்களும், ஏடிஎம் சேவைப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS