நேற்று வங்கிகள் நடத்திய வேலை நிறுத்தத்தின் காரணமாக, இந்தியா முழுவதும் பணப் பரிவர்த்தனை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.
பொதுத்துறை வங்கிகளை இணைப்பதை எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள சுமார் மூன்று லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார், பத்தாயிரத்திற்கும் மேல் பணப் பரிமாற்றம் முடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிகளின் வேலை நிறுத்தத்தினைப் பற்றித் தெரியாத பொதுமக்கள், வங்கிகளுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.