தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்த பீலா ராஜேஸ் தற்பொழுது, அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள், கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனைக் கட்டுப்படுத்த பலப் புதியக் குழுக்களை, மாநில அரசு நியமித்தது. இருப்பினும், எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து, வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இதனால், ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் சிறப்புக் குழு உருவாக்கப்பட்டு கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், தற்பொழுது தமிழக அரசானது அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத்துறை செயலாளராக பணி செய்து வந்த பீலா ராஜேஸ் தற்பொழுது, வணிகவரித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் சுகாதாரத் துறை செயலாளராக மீண்டும், ராதாகிருஷ்ணனே நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை, சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.